இராணுவம் காணிகளை சுவீகரிக்கமுன் வன்னியில் மீள் குடியமர்வு அவசியம் - நிருபமா ராவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்
[ வலம்புரி ][ Sep 02 09:43 GMT ]
இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீள்குடியமர்த்தாமல் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கவுள்ளனர் அதற்கு முன்னர் வன்னியில் மீள்குடியமர்வு அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். [  ]
அரசிலமைப்பு திருத்தச் சட்டம் நீதியான தேர்தலை நடத்த விடாது : கஃபே
[ வீரகேசரி ][ Sep 02 09:32 GMT ]
அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக நாட்டில் நீதியான, நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என கஃபே அமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் நியமனங்கள் சுதந்திரமான தேர்தல்களை நடத்த விடாது தடுத்துவிடும் என்று கஃபே அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது. [  ]
எதைநோக்கிச் செல்கிறோம் ?
[ தினக்குரல் ][ Sep 01 09:48 GMT ]
சக்திமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட ஜனநாயக நாடுகளில் பெரும்பாலானவற்றில் ஜனாதிபதியின் பதவிக் காலங்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான வரையறைகள் செய்யப்பட்டிருப்பதன் அடிப்படை நோக்கமே அதிகார துஷ்பிரயோகத்தையும் சர்வாதிகாரப் போக்குத் தலைதூக்குவதையும் தடுப்பதேயாகும். ஆனால், இலங்கையர்களாகிய நாம் எதை நோக்கிச் செல்கிறோம்? [  ]
கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்
[ தினக்குரல் ][ Sep 01 09:35 GMT ]
கண்டியாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும். [  ]
நடந்ததை மறப்போம்.. இனி இணைந்தே செயல்படுவோம் : இலங்கைத் தமிழர்களுக்கு நிருபமா ராவ் பதில்
[ விகடன் ][ Sep 01 09:27 GMT ]
இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், 'நடந்ததை மறந்து, இனி இணைந்து செயல்படுவோம்,' என்று பதிலளித்தார். போரின் இறுதித் தருணங்களில் இந்தியா ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் கருதுகின்றனர். [  ]
'கொழும்பு நிர்வாகம் விரும்புவதையே ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்'
[ தினக்குரல் ][ Aug 31 09:51 GMT ]
கொழும்பு நிர்வாகம் விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்த நிலைமையால் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடின்மை வலிமையானதாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதாவது சமாதான எதிர்பார்ப்புகளை தாமதப்படுத்தினால் மக்கள் மத்தியில் இருந்து எதிர்மறையான கருத்துகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும். [  ]
கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 7 ஆம் திகதி கூடி ஆராயப்படும்
[ உதயன் ][ Aug 31 09:47 GMT ]
உத்தேச அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது என மட்டக் களப்பு மாவட்டக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று "உதயனு'க்குத் தெரிவித்தார். [  ]
அரசியலமைப்பு திருத்தம் குறித்து த.தே.கூட்டமைப்புடன் கலந்துரையாடப்படவில்லை
[ தமிழ் மிரர் ][ Aug 31 02:35 GMT ]
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இவ்விடயத்தில் தமிழ் மக்களை ஊக்குவிக்க அரசு தயார் இல்லை என விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். [  ]
கனடா செல்ல கப்பல் பயணத்திற்காக தாய்லாந்தில் காத்திருக்கும் தமிழர்கள்
[ தினக்குரல் ][ Aug 31 02:27 GMT ]
வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்து தங்கியிருப்பதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுவதாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் கனடாவுக்கு அடுத்த படகில் செல்வதற்காகக் காத்திருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. [  ]
டி.ஆர்.பாலுவின் தமிழினக் கரிசனம்!
[ இணையத் தமிழ் ][ Aug 31 02:24 GMT ]
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அடேயப்பா, அப்படி என்னத்தை ஈழத் தமிழர்களுக்காக இந்தியா செய்துவிட்டது, இப்போது கெடுப்பதற்கு? என்ற தெரியவில்லை! [  ]
|
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதுவரை கொழும்பு ஆக்கபூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கை என்ன? கேட்டறிந்துகொள்ளுமாறு நிருபமாவிடம் மனோ கணேசன் கோரிக்கை
[ தினக்குரல் ][ Sep 02 09:39 GMT ]
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட ஆக்கபூர்வமான விடயங்கள் என்ன என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் கொழும்பு நிர்வாகத்திடம் அறிந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். [  ]
நிருபமாவின் சம்பூர் பயணம் கடைசி நேரத்தில் இரத்து
[ தினக்குரல் ][ Sep 02 09:25 GMT ]
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் சம்பூர் பிரதேசத்திற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் கடைசி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. [  ]
வடபகுதிக்கு விஜயம் செய்த நிருபமா மீள்குடியமர்ந்த மக்களைச் சந்திக்கவில்லை வெறும் கண்துடைப்பு எனப் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி
[ உதயன் ][ Sep 01 09:45 GMT ]
இந்திய வெளியுறவுச் செயலர் நிருப மாராவின் நேற்றைய வடமாகாண விஜ யம் வெறும் அரச அதிகாரிகளுடனான சந் திப்பாகவே இருந்தது. அவர் மீள்குடிய மர்த்தப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்க ளுக்கு செல்லவேயில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக் கின்றன. [  ]
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது நிருபமா முன்னிலையில் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ தினக்குரல் ][ Sep 01 09:34 GMT ]
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கலந்துகொண்ட நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். [  ]
சந்திரகாந்தன் - நிரூபமா இன்று சந்திப்பு
[ வீரகேசரி ][ Sep 01 09:21 GMT ]
இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். இநதியாவிலுள்ள சேவா எனும் பெண்கள் அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது இந்திய வெளியுறவு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். [  ]
முன்னாள் போராளிகள் 500 பேர் சனியன்று விடுவிக்கப்படுவர்
[ உதயன் ][ Aug 31 09:49 GMT ]
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மேலும் ஐந்நூறு போராளிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உற வினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். [  ]
வவு. மெனிக் பார்ம் முகாமை இன்று பார்வையிட்டார் நிரூபமா
[ வீரகேசரி ][ Aug 31 09:43 GMT ]
உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், இன்று வவுனியா மெனிக் பாஃம் முகாமுக்குச் சென்றுள்ளார். இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யும் அவர், மாவட்ட அபிவிருத்தி குறித்து பார்வையிடுவதுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார். நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நிரூபமா சந்திக்கவுள்ளார் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். [  ]
மக்கள் மீதான அடக்குமுறை இன்னமும் கைவிடப்படவில்லை - சுரேஸ் எம்.பி. தெரிவிப்பு
[ வலம்புரி ][ Aug 31 02:32 GMT ]
பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகின்ற போதிலும் எமது மக்கள் மீதான அடக்குமுறை இன்னமும் கைவிடப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [  ]
அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்
[ தினக்குரல் ][ Aug 31 02:26 GMT ]
இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்பது உட்பட ஏழு முக்கிய தீர்மானங்களை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப்பரவலாக்கலை அமுல்படுத்தி மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும். [  ]
அரசியல் யாப்பு சீர்திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்
[ வீரகேசரி ][ Aug 30 10:01 GMT ]
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் மாகாண சபை அதிகாரங்களை மீளமைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. [  ]
|