தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு; முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர உணர்வெழுச்சியுடன் ஏற்பாடுகள்

[ உதயன் ][ May 18 11:22 GMT ]


தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது. [ ]

Feature Image



Image Courtesy: Uthayan

None

dfsd

 

Scarborough Paint Centre

 

safd

 

dfsd

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

[ விகடன் ][ May 18 12:00 GMT ]

அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும்போது மேடைகளில் பிரபாகரன் படம் போடப்பட்டிருந்தது.அப்போது பிடித்தது இப்போது பிடிக்கவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாத இயக்கத் தலைவருமான யாசின் மாலிக் கூறியுள்ளார். [ full story | ]

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு நாளை :த.தே.ம.மு

[ தமிழ் மிரர் ][ May 17 20:50 GMT ]

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை சனிக்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முண்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஏற்பாட்டில் நாளை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். [ full story | ]

சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யையும் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

[ தமிழ் மிரர் ][ May 17 10:12 GMT ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. [ full story | ]

ஐ.நா. பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவிப்பு

[ வீரகேசரி ][ May 17 10:09 GMT ]

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். [ full story | ]

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா

[ வீரகேசரி ][ May 17 10:06 GMT ]

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. [ full story | ]

கிளிநொச்சியில் சுமார் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்கின்றனர்: கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்

[ வீரகேசரி ][ May 17 10:01 GMT ]

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல இடம்பெற்றுவருகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவங்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாகவுள்ளன. [ full story | ]

அமெரிக்கத் தூதுவர் சம்பந்தனுடன் பேச்சு

[ உதயன் ][ May 16 10:15 GMT ]

வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.அத்துடன், செப்ரெம்பர் மாதம் நடைபெறுமென அரசால் அறிவிப்பு விடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் அமெரிக்கத் தூதுவரிடம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கூட்டமைப்பினர் "சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். [ full story | ]

சிறிலங்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறது பிரித்தானியா

[ உதயன் ][ May 16 10:12 GMT ]

மனித உரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் சார்பாகப் பதிலளித்த போதே, துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். [ full story | ]

1, 474 பேர் சார்பில் ரிட்; வலி. வடக்குக் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக

[ உதயன் ][ May 16 10:09 GMT ]

வலி. வடக்கில் பொதுமக்களின் காணிகள் படைகளால் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்துக் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆயிரத்து 474 பேர் சார்பில் "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [ full story | ]

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும்

[ வீரகேசரி ][ May 16 09:58 GMT ]

வளம் குறைந்த சிறிய நாடுகளில், தமது பொருண்மிய மேலாதிக்க நலன்களுக்காக வல்லரசாளர்கள் மோதும் போக்கானது, அந்த நாடுகளின் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது அடிப்படை உரிமைகளை வெகுவிரைவில் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கப்போகிறது. வடக்கில் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்ப இவர்கள் மறுப்பது, இந்த யதார்த்தத்தை புரிய வைக்கிறது. [ full story | ]

வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்: ஜனாதிபதி

[ வீரகேசரி ][ May 18 11:20 GMT ]

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். [ full story | ]

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சிவாஜிலிங்கம்

[ வீரகேசரி ][ May 17 20:45 GMT ]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். [ full story | ]

முசலியில் அரசினால் சிங்கள குடியேற்றம்; முதற்கட்டமாக 1,500 குடும்பங்கள் அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

[ உதயன் ][ May 17 10:09 GMT ]

முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசு தற்போது ஆயிரத்து 500 சிங்களக் குடும்பங்களை அங்கு அழைத்து வந்து குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். [ full story | ]

ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்கள் மூலம் அரசை வீழ்த்த முடியாதுஎதிர்க் கட்சிகளின் சதி, தந்திரங்கள் புஷ்வாணமாகும்

[ தினகரன் ][ May 17 10:08 GMT ]

ஆர்ப்பாட்டங்கள் மூலமோ அழுத்தங்கள் மூலமோ அர சாங்கத்தை வீழ்த்த முடியாது. அரசாங்கம் மிகுந்த பலம் வாய்ந்ததாக உள்ளதென பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பெரிதாக எதையோ சாதிக்கப் போவதாக எண்ணி 15 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்தது போலவே 21 ஆம் திகதிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் புஷ்வாணமாவது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார். [ full story | ]

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை யாழ்ப்பாணத்திலும்

[ உதயன் ][ May 17 10:05 GMT ]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. [ full story | ]

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்

[ தமிழ் மிரர் ][ May 17 09:59 GMT ]

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படவும் இல்லை. முதலமைச்சரின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ளும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு மாகாண சபைகளை கலைத்துவிடும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலைமையில் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை எதிர்ப்பதானது வெறுமனே இன உணர்வுகளை தூண்டி சிங்கள மக்களின் நற்சான்றிதலை பெறுவதற்கு எடுக்கும் முயற்சியேயன்றி வேறொன்றும் அல்ல. [ full story | ]

வடக்கு இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட தனிநாடு அங்குள்ள தமிழ் மக்கள் அடிமைகள் : ஜே.வி.பி.

[ வீரகேசரி ][ May 16 10:13 GMT ]

வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அங்கு முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி.யின் அரசியல் சபை முக்கியஸ்தரும் எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். வட மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது. அவர்களுக்கு சம உரிமைகளையும், ஜனநாயகத்தையும் வழங்கி நிர்வாகத்தை பரவலாக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். [ full story | ]

யாழில் இராணுவம் மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது: கோத்தபாய

[ வீரகேசரி ][ May 16 10:10 GMT ]

பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [ full story | ]

யுத்தம் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மன்னிப்பு சபை

[ வீரகேசரி ][ May 16 10:03 GMT ]

இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. [ full story | ]

கனடா அரசுக்குள்ள பெருந்தன்மை இலங்கைக்கு இல்லை: குகவரதன்

[ தமிழ் மிரர் ][ May 15 10:17 GMT ]

கனடாவில் வீதியொன்றுக்கு 'வன்னிவீதி' எனப் பெயர் சூட்டப்பட்டு தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கையில் தமிழர்கள் கணிசமாக வாழும் தேசிய தலைநகரில் வீதியொன்றுக்கு சட்டவிதிகளின்படிகூட 'தமிழ்ச் சங்க வீதி' எனப் பெயரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். [ full story | ]

Events
Notices
Featured News

[உதயன் - May 17, 2013 10:05:19 GMT]

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை யாழ்ப்பாணத்திலும்


[வீரகேசரி - May 17, 2013 10:01:30 GMT]

கிளிநொச்சியில் சுமார் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்கின்றனர்: கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்


[தமிழ் மிரர் - May 17, 2013 9:59:26 GMT]

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்


[வீரகேசரி - May 16, 2013 9:58:24 GMT]

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும்


[உதயன் - May 15, 2013 10:16:04 GMT]

அழுவதற்கு வேண்டும் அனுமதி


[பொங்கு தமிழ் - May 15, 2013 10:08:19 GMT]

மே 18: விடுதலையை வென்றெடுக்க உறுதிகொள்ளும் நாள்! – வவுனியா நினைவு நிகழ்வு குறித்து மாவை


[வீரகேசரி - May 14, 2013 10:00:38 GMT]

இலங்கையின் இறுதியுத்த ஆவணப்படம் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில்


[தமிழ் மிரர் - May 14, 2013 9:55:19 GMT]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப் போகிறதா?


[தமிழ் மிரர் - May 13, 2013 10:22:52 GMT]

50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை


[தினக்கதிர் - May 12, 2013 11:08:53 GMT]

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்


[BBC தமிழோசை - May 12, 2013 10:33:20 GMT]

வடக்கு வாக்காளர் பட்டியலை மாற்ற அவசர சட்டம் வருகிறது


[உதயன் - May 11, 2013 10:48:09 GMT]

சமாதானத்தை இலங்கை இழக்கவேண்டி ஏற்படும்; அரசை எச்சரிக்கிறார் தயான் ஜயதிலக்க


[உதயன் - May 11, 2013 10:39:19 GMT]

இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?


[உதயன் - May 10, 2013 10:15:09 GMT]

கொக்கிளாய் தனியார் காணியில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்


[உதயன் - May 10, 2013 10:12:35 GMT]

புலிகள் புதுத் தலைவர் புனைவுகள்