நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை; நாடாளுமன்றில் சம்பந்தன் முழக்கம்

[ உதயன் ][ May 22 10:15 GMT ]


சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.சுதந்திரம் என்பது நாட்டில் தவறான வழியில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும், ஜெனிவா தீர்மானத்தை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். [ ]

Feature Image



Image Courtesy: Tamil Mirror

None

dfsd

 

Scarborough Paint Centre

 

safd

 

dfsd

'இலங்கையில் பௌத்தர்களால் ஏனையோர் மத சுதந்திரம் பாதிப்பு'

[ BBC தமிழோசை ][ May 22 10:33 GMT ]

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் 2012ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது.கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை பௌத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுவதாகவும் அது குறிப்பிடுகிறது. [ full story | ]

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணை

[ வீரகேசரி ][ May 22 10:30 GMT ]

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இந்தப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பிரேரணையாக இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. [ full story | ]

இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான்: திருநாவுக்கரசர்

[ தற்ஸ் தமிழ் ][ May 22 10:26 GMT ]

இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து தமிழகத்தில் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.இலங்கையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேசமயம் அதனை காரணமாக வைத்து கொண்டு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். [ full story | ]

'அரசியலமைப்பு திருத்தங்களை தெரிவுக்குழுவே பிரேரிக்க முடியும்'

[ தமிழ் மிரர் ][ May 22 10:19 GMT ]

நாடாளுமன்ற தெரிவுக்குழு மட்டுமே இலங்கையில் அரசியலமைப்புக்கான திருத்தங்களை பிரேரிக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்திக் கூறியுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று தெரிவித்துள்ளார். [ full story | ]

வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் : த. தே. கூ.

[ வீரகேசரி ][ May 22 10:14 GMT ]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாதிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முதல் அவர்கள் வடக்கில் வசித்திருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியும் என்றதொரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது. [ full story | ]

'வட-மாகாண தேர்தலை நடத்த அச்சப்பட வேண்டாம்'

[ BBC தமிழோசை ][ May 21 10:21 GMT ]

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு-மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழிக்க வேண்டும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகும் என்றும் தம்மை சந்திக்கவரும் அரசியல் தலைவர்களிடம் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், ஆனால் இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றி வடக்குத் தேர்தலுக்குப் பின்னரே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மல்வத்து மகாநாயக்க தேரர் கூறியுள்ளார். [ full story | ]

"இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை"

[ BBC தமிழோசை ][ May 21 10:19 GMT ]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என ஐநா தலைமைச் செயலருக்கு ராஜபக்ஷ வழங்கியிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது. [ full story | ]

13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசிற்கு கிடையாது : இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு

[ வீரகேசரி ][ May 21 10:15 GMT ]

அரசில் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர். [ full story | ]

வன்னித் தேர்தலின் பின்பே புதிய கட்சிகளின் பதிவுகள்; பிரதித் தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

[ உதயன் ][ May 21 10:12 GMT ]

புதுக்குடியிருப்பு மற்றும் கரை துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே புதிய கட்சி பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். [ full story | ]

உயர் பாதுகாப்பு வலயம்: தீர்க்கப்பட முடியாத சிக்கல்

[ தமிழ் மிரர் ][ May 21 10:05 GMT ]

உயர்பாதுகாப்பு வலய காணி சுவீகரிப்பு விவகாரத்தை உள்நாட்டு பாதுகாப்பு என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் அரசாங்கம் நியாயப்படுத்தினாலும், இந்த விவகாரம் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது என்பதால் சர்வதேசத்தின் கவனத்தில் இருந்து முற்றிலும் மறைத்து விடமுடியாது. அத்துடன் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரித்து, அரசாங்கம் காணி சுவீகரிப்புகளையும் இராணுவ மயமாக்கலையும் உலகளவில் நீண்டகாலத்துக்கு நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியாது. [ full story | ]

அடக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது அவசியம்; யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவிப்பு

[ உதயன் ][ May 22 10:30 GMT ]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். [ full story | ]

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள், பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்: மனோ கணேசன்

[ வீரகேசரி ][ May 22 10:28 GMT ]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். [ full story | ]

சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்

[ வீரகேசரி ][ May 22 10:21 GMT ]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கமாக இருக்கின்றது. சர்வதேசத்தின் தலையீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் தலையீட்டிலிருந்து விடுதலை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. [ full story | ]

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது : மங்கள

[ வீரகேசரி ][ May 22 10:17 GMT ]

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாத என அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் ஒடுக்கப்படும் நிலைமை இலங்கையில் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். [ full story | ]

சம்பந்தனுக்கு, அஸாத் சாலி கடிதம்

[ தமிழ் மிரர் ][ May 22 10:12 GMT ]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியாளர்களிடம் உரிய தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. [ full story | ]

ஐ. நாவின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்குமா? - பொன். செல்வாராசா எம்.பி கேள்வி

[ வீரகேசரி ][ May 21 10:20 GMT ]

யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாது அரசு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார்களா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார்.சமாதான காலத்தில் இவ்வளவு இராணுவம் தேவையில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அரசு அமுல்படுத்த முடியாத நிலையிலுள்ளது எனினும் தெரிவித்தார். [ full story | ]

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்

[ உதயன் ][ May 21 10:17 GMT ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது அந்த நிகழ்வின் போதே பிரான்ஸ் நாட்டு புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து போரில் பாதிப்படைந்த 100 மாணவர்களுக்கு 3000 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டது. [ full story | ]

காணி சுவீகரிப்பு: 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

[ தமிழ் மிரர் ][ May 21 10:14 GMT ]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. [ full story | ]

கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி : முஜிபுர் ரஹ்மான்

[ வீரகேசரி ][ May 21 10:06 GMT ]

வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் [ full story | ]

இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்

[ வீரகேசரி ][ May 21 10:01 GMT ]

இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படாத போதிலும், நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போன்றே நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் தெரிவித்துள்ளார். [ full story | ]

Events
Notices
Featured News

[BBC தமிழோசை - May 22, 2013 10:33:01 GMT]

'இலங்கையில் பௌத்தர்களால் ஏனையோர் மத சுதந்திரம் பாதிப்பு'


[BBC தமிழோசை - May 21, 2013 10:19:16 GMT]

"இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை"


[தமிழ் மிரர் - May 21, 2013 10:05:02 GMT]

உயர் பாதுகாப்பு வலயம்: தீர்க்கப்பட முடியாத சிக்கல்


[உதயன் - May 20, 2013 10:54:46 GMT]

ஒரு நாள் 3 அப்பாக்கள்.....


[உதயன் - May 19, 2013 13:10:11 GMT]

முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்


[வீரகேசரி - May 19, 2013 13:05:30 GMT]

வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்: கபே


[உதயன் - May 17, 2013 10:05:19 GMT]

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை யாழ்ப்பாணத்திலும்


[வீரகேசரி - May 17, 2013 10:01:30 GMT]

கிளிநொச்சியில் சுமார் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்கின்றனர்: கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்


[தமிழ் மிரர் - May 17, 2013 9:59:26 GMT]

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்


[வீரகேசரி - May 16, 2013 9:58:24 GMT]

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும்


[உதயன் - May 15, 2013 10:16:04 GMT]

அழுவதற்கு வேண்டும் அனுமதி


[பொங்கு தமிழ் - May 15, 2013 10:08:19 GMT]

மே 18: விடுதலையை வென்றெடுக்க உறுதிகொள்ளும் நாள்! – வவுனியா நினைவு நிகழ்வு குறித்து மாவை


[வீரகேசரி - May 14, 2013 10:00:38 GMT]

இலங்கையின் இறுதியுத்த ஆவணப்படம் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில்


[தமிழ் மிரர் - May 14, 2013 9:55:19 GMT]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப் போகிறதா?


[தமிழ் மிரர் - May 13, 2013 10:22:52 GMT]

50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை